இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல -மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல என்று திமுக மொழிப்போர் வீரவணக்க கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
திமுக மொழிப்போர் வீரவணக்க கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தி மொழியின் ஆதிக்கத்தினை தான் எதிர்க்கிறோம், இந்தியை அல்ல. எந்த மொழிக்கும் தமிழ் மொழியை போன்ற உணர்வுப் போராட்டம் நடைபெற்றது கிடையாது.
தேர்தலுக்காகவே பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகிறார். தமிழகத்தில் எய்ம்ஸ் கொண்டு வர இவ்வளவு தாமதம் ஏன் என்பதற்கு மதுரையில் பிரதமர் மோடி பதில் தர வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி அமைத்தார்களா? மீனவர்களுக்கு உதவும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார்களா? கள்ளநோட்டுகளை பிடிக்க நல்ல நோட்டுகளுக்கு தடை விதித்தார் பிரதமர் மோடி. திருடனை பிடிப்பதற்காக மற்றவர்களை பிடித்துக்கொண்டு திருடனை தேடினால் எப்படி சாத்தியம்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.