மக்களவை தேர்தல்:பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல,கருத்து திணிப்பு- அமைச்சர் ஜெயக்குமார்

மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2019-01-26 07:46 GMT
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது. கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலரின் தூண்டுதலுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரையாக வேண்டாம். நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு தமிழக அரசை தள்ள வேண்டாம். சிரமத்தை அரசு சொல்லும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

ஸ்டாலினுக்கு உலகமே மாயமாக உள்ளதால் தமிழக அரசை மாயமான் என்று தான் சொல்வார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்