கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை - வைகோ
கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், போராடி வரும் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு வாழ்த்துகள். இதுவரை இல்லாத அளவில் தமிழகத்திற்கு கேடுகளை விளைவிக்கிறது பாஜக அரசு.
மத்திய அரசு தமிழகத்திற்கு செய்துள்ள துரோகங்களை வரிசையாக பட்டியலிட முடியும். புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதல்-மந்திரி நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.