வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா?- மதுரை ஐகோர்ட் கிளை
வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி விடுத்து உள்ளனர்.
மதுரை
பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-ல் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.
மேலும் வயது வந்தவர்கள் மட்டும் மதுபாட்டில்களை வாங்குவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கலாமா? டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக் கூடாது?; டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதை மட்டும் வைத்துக்கொள்ளலாமே? என கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.