காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.