பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.62 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-04-12 00:43 GMT
சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9காசு அதிகிரத்து லிட்டருக்கு ரூ.69.89-காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்