குடிநீர் பிரச்சினை: முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் ஆதாரங்களை அதிகரிக்கவும், கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்கவும் அரசு தவறிவிட்டது. சென்னையின் நீராதாரங்களை துாரெடுத்து ஆழப்படுத்தி மழையின்போது நீரை சேமிக்க நடவடிக்கை தேவை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.