கிருஷ்ணகிரியில் அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-06-10 01:55 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் சூளகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகின.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினை அடுத்து, பேருந்துகளை பின்தொடர்ந்து வந்த லாரியும் கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.  10 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்