நாங்கள் லெட்டர்பேடு கட்சியா? பொய் சொல்லி ஏமாற்றி அதிமுகவில் இணைக்கின்றனர் - டிடிவி தினகரன்

நாங்கள் லெட்டர்பேடு கட்சியா? பொய் சொல்லி ஏமாற்றி அதிமுகவில் இணைக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

Update: 2019-06-22 08:54 GMT
திருச்சி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  திருச்சியில் இன்று நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதில், கலந்து கொண்ட பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழர்களின் உரிமைக்காக பாதுகாப்பிற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தவொரு சக்தியையும் துணிச்சலுடன் எதிர்த்து போராடும் என்று கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-

எங்களை லெட்டர்பேடு கட்சி என்று விமர்சிப்பவர்கள், எங்களது கட்சியினரை பொய் சொல்லி, ஏமாற்றி அவர்களது கட்சியில் இணைக்கின்றனர். ஆனால் அவர்களும் மீண்டும் எங்களது கட்சிக்கு வந்து விடுகின்றனர்.  30 ஆண்டுகளுக்குப் பின் மாபெரும் குடிநீர் பஞ்சம், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை எடுக்‍காததே காரணம்.

தமிழகத்தில் எந்த ஒரு மதவாதமும் தலைதூக்க விடமாட்டோம். இங்கு வாழும் அனைத்து சகோதர, சகோதரிகளும் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக வாழவும், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறவும் அமமுக போராடும் என கூறினார்.

மேலும் செய்திகள்