சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது

கடலூரில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கியது.

Update: 2019-07-07 03:52 GMT
சிதம்பரம்,

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். உலக புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.  இதனிடையே ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கியது.

இதில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.  இந்த 5 தேர்களையும் திரளாக கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்