அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
அத்திவரதரை தரிசிக்க சில எம்.பி.க்கள் கடிதம் எழுதியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
சென்னை,
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாத்திகவாதிகள் தற்போது ஆத்திகவாதிகளாக மாறி இரட்டை வேடம் போடுகின்றனர். அத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை என்றார்.
மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரத்தின் ட்விட்டுக்கு ஜெயக்குமார் பதில் அளித்து உள்ளார்.