ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2019-07-17 07:31 GMT
சென்னை

சட்டசபை விதி எண் 110ன் கீழ்  முதல்அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய சுகாதார மாவட்டம் உருவாக்கப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு.

* 50 கோடி ரூபாய் செலவில் 10 போக்குவரத்து பணிமனைகள் நவீனப்படுத்தப்படும்.

* கரூரில் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.

* இந்தாண்டு 2,000 புதிய பேருந்துகள் ரூ.600 கோடி மதிப்பில் வாங்கப்படும்.

* 296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.79 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

* 32 மாவட்டத்தில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உலக தரம்வாய்ந்த தீவிர சிகிச்சை மையம்.

* ஈரோடு அரசு மருத்துவமனை ரூ.67.76 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்