தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான் இளைஞரணியின் இலக்கு - உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது தான் இளைஞரணியின் இலக்கு என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனக்கு கிடைத்த பொறுப்பு ஒருபக்கம் பெருமையாகவும் மறுபக்கம் மலைப்பாகவும் இருக்கிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. செயல்பாட்டின் மூலம் விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு என கூறியுள்ளார்.
டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று இளைஞரணி தொடங்கப்பட்ட 40ஆம் ஆண்டின் துவக்கம்! அணியை வளர்த்த தலைவருக்கு நன்றி! என்னோடு தோள் சேர்ந்து உழைக்கும் இளைஞர் அணி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை மலர வைப்பதே இந்த 40வது ஆண்டில் நாங்கள் ஏற்கும் சபதம்! என பதிவிட்டுள்ளார்.
இன்று இளைஞரணி தொடங்கப்பட்ட 40ஆம் ஆண்டின் துவக்கம்!
— Udhay (@Udhaystalin) July 20, 2019
அணியை வளர்த்த தலைவருக்கு நன்றி! என்னோடு தோள் சேர்ந்து உழைக்கும் இளைஞர் அணி நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.
தமிழகத்தில் தலைவர் @mkstalin ஆட்சியை மலர வைப்பதே இந்த 40வது ஆண்டில் நாங்கள் ஏற்கும் சபதம்! #DMKYouthWingDaypic.twitter.com/Vs5uyPtWVz