வைகோவுடன் புகைப்படம் எடுப்போர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்; ம.தி.மு.க.

வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.

Update: 2019-08-08 06:15 GMT
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.  இந்நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தின்படி அவருக்கு மேலவை எம்.பி. தொகுதி ஒதுக்கப்பட்டது.  இதன்படி வைகோ மேலவை எம்.பி.யானார்.

இதனிடையே அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி அளிக்கலாம் என தெரிவித்து உள்ளது.  அதனுடன், வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்