தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என்றார்.