நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைவு: மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருக்கிறது. மத்திய அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருப்பது, இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை காட்டுகிறது. வேலையிழப்பு, தொழில்துறை பிரச்சினைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
The slowdown in the national economy is now evident from the abysmal GDP rate
— M.K.Stalin (@mkstalin) August 30, 2019
Will the BJP Government at least now wake up and start addressing real issues - job losses, industrial slump, rural distress - rather than speaking in mere rherotric and chest thumping? #EconomyCrisis