பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை இன்று தலா 5 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னை,
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு உயர்ந்து , ஒரு லிட்டர் ரூ.74.56 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு உயர்ந்து லிட்டர் ரூ.68.84 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.