இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது - ராகுல் காந்தி
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. உலகளவில் இந்தியாவின் பொதுமொழி இருக்கவேண்டும். அதற்கான தகுதி இந்திமொழிக்கு உண்டு என செப். 14ல் இந்தி தினத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் கிடையாது என, டுவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மராத்தி, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளை குறிப்பிட்டு, இந்த கருத்தை தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
🇮🇳Oriya 🇮🇳 Marathi
— Rahul Gandhi (@RahulGandhi) September 16, 2019
🇮🇳 Kannada 🇮🇳Hindi 🇮🇳Tamil
🇮🇳English 🇮🇳Gujarati
🇮🇳Bengali 🇮🇳Urdu 🇮🇳Punjabi 🇮🇳 Konkani 🇮🇳Malayalam
🇮🇳Telugu 🇮🇳Assamese
🇮🇳Bodo 🇮🇳Dogri 🇮🇳Maithili 🇮🇳Nepali 🇮🇳Sanskrit
🇮🇳Kashmiri 🇮🇳Sindhi
🇮🇳Santhali 🇮🇳Manipuri...
India’s many languages are not her weakness.