பிரதமர் மோடியும் சீன அதிபரும் உரையாடியபடி கலைச்சிற்பங்களை பார்வையிட்டனர்

மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்கள் முன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Update: 2019-10-11 12:04 GMT
மாமல்லபுரத்தில், 

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்  முறைசாரா சந்திப்பு இன்றும் (அக்.11) நாளையும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இந்த சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். 

பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்து ரசித்து வருகின்றனர்.  அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் முன்  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்  ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

மேலும் செய்திகள்