சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று செயல்படும் : ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
சென்னை,
வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.இந்த நிலையில், சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.