சீமானின் கருத்து அநாகரீகமானது - கனிமொழி எம்.பி
சீமானின் கருத்து அநாகரீகமானது என திமுக எம்.பி.,கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலக நாடாளுமன்ற அமைப்பு சார்பில் செர்பியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக எம்.பி.கனிமொழி இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது அநாகரீகமானது. முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் பேசுகின்றனர், ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என்றார்.