ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை - மு.க.ஸ்டாலின்

ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-11-01 05:44 GMT
சென்னை,

சென்னை வானகரத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து திருமண விழாவில்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை, ஆனால் முதலமைச்சர் கோபப்படுகிறார். எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவேன் என சட்டசபையில் சொன்னேன், அதன்படியே நடக்கிறேன். 2 இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் இந்த வெற்றி தொடராது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தயாராகுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்