பெருங்களத்தூ​ரில் கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

பெருங்களத்தூ​ரில் கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Update: 2019-11-02 07:51 GMT
சென்னை,

சென்னை அருகே பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே பெருங்களத்தூரில் ரூ 206.83 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ரயில்வே மேம்பால கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்