அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை - மு.க.ஸ்டாலின்

அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-11-03 05:28 GMT
சென்னை,

புதுக்கோட்டை விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர்  பேசியதாவது:-

திமுக முதல் முறையாக ஆட்சியமைத்த போது சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். 

1967ம் ஆண்டிற்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. வைதீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை.

பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை.  ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்