வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -முதலமைச்சர் பழனிசாமி

வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-12 06:23 GMT
சென்னை,

முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

“வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது. 

கட்சிகளின் கொடி கம்பங்களை நடக்கூடாது என்ற உத்தரவு இதுவரை இல்லை . உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசுக்கு தொடர்பு இல்லை. கால அளவு குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது” என்றார். 

மேலும் செய்திகள்