சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.232 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது.

Update: 2019-11-19 05:58 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆனது.

இதன்பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து உயர்ந்தது. செப்டம்பரில் ரூ.30 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ந்தேதி வரலாற்றில் ரூ.29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  சென்னையில் கடந்த வாரத்தில் சரிவை சந்தித்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி, பவுன் ஒன்றுக்கு தங்கம் ரூ.232 விலை உயர்ந்துள்ளது.  இதேபோன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3 ஆயிரத்து 658க்கும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.29 ஆயிரத்து 264க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்