ஓ.பி.எஸ்-ஐ குறிப்பிடவில்லை, அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்களே? என்ற அர்த்தத்தில் கேட்டேன் -குருமூர்த்தி விளக்கம்
ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. அதிமுகவினர் துணிவில்லாமல் ஏன் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஓ பி எஸ் சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை https://t.co/CGDH63thBQ
— S Gurumurthy (@sgurumurthy) 25 November 2019
இதை ஏற்கெனவெயே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓ பி எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
— S Gurumurthy (@sgurumurthy) 25 November 2019
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கன்னியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து.
— S Gurumurthy (@sgurumurthy) 25 November 2019