பள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி ; கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
தமிழக அரசின் சார்பில் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.