கோவையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது

கோவையில் 11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-11-30 10:17 GMT
கோவை,

கோவை கீரநாயக்கன்பாளையத்தில் கடந்த நவம்பர் 26ந்தேதி நண்பரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.  இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுபற்றி அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராகுல் (வயது 21), பிரகாஷ் (வயது 22), கார்த்திகேயன் (வயது 28) மற்றும் நாராயண மூர்த்தி (வயது 30) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவர் உள்பட மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்