கனமழை எதிரொலி; போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-12-01 06:35 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.

கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளார்.

வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்