தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி; அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2019-12-07 07:59 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல கவனிப்பு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்ட 4 முனை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.  இந்த திட்டங்களை தமிழக முதல் அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்