உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-10 11:30 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. 

எந்தெந்த வழக்குகளை போட்டு தேர்தலை நிறுத்தலாம் என திமுக ஒரு பட்டியலே வைத்துள்ளது. 

தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்