குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் கமல் சந்திப்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

Update: 2019-12-18 13:08 GMT
சென்னை,

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், ”சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அவை மாற்றப்பட வேண்டும்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்” என்றார். 

மேலும் செய்திகள்