திருச்சியில் கார், லாரி மோதல்; 2 பேர் பலி
திருச்சியில் காரும், லாரியும் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி,
திருச்சியில் முசிறி அருகே செவந்தலிங்கபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் காரைக்குடியை சேர்ந்த அழகப்பன், சதீஷ் ஆகிய இருவர் உயிரிழந்து உள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.