பேருந்தில் ஏறி ஆட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள் கைது..!
சென்னை மந்தைவெளியில் பஸ்சில் ஏறி ஆட்டம் போட்ட 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னை மந்தைவெளியில் இருந்து பிராட்வேக்கு மாநகர பேருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏறிய நியூ காலேஜ் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பேருந்தின் பக்கவாட்டில் ஏறி மேலே சென்று அட்டகாசம் செய்துள்ளார்.
இதனை பார்த்த திருவல்லிக்கேணி போலீசார் பேருந்து பயணிகள் உதவியுடன் அந்த மாணவனையும், அவருக்கு உதவிய மற்றொரு மாணவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.