திருவள்ளுவரை போல, அதிமுகவும் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில் தான் அதிமுகவும் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-16 11:57 GMT
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில்தான் அதிமுகவும் உள்ளது.

சாதி, மதம், இனம் பேசும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் அரிய மருந்து திருக்குறள். சாதி, மதம், இன வழி செல்வோர் அறவழி போதிக்கும் திருக்குறளை படித்து பின்பற்ற வேண்டும்.

திருக்குறள் படித்தால் அகவழி மணக்கும், மனமது தெளிவு பெறும், மனிதகுலம் தழைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்