தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-01-20 06:08 GMT
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 

 கூட்டத்தில் பேசிய  எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். என்னைப்போல், ஜெயலலிதா பேரவையினர் தன்னலமற்று உழைத்தால் உயரலாம் என கூறினார்.

இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்