பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது- அமைச்சர் பாஸ்கரன் திடீர் பல்டி

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறிய நிலையில் பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் பாஸ்கரன் கூறி உள்ளார்.

Update: 2020-01-22 11:35 GMT
சென்னை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நேற்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசும் போது, 

பிஜேபியிடம் இருந்து நாங்கள் தனியாக செல்வதற்கு  நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.

உள்ளாட்சி தேர்தல் எங்கள் கையில் இருந்தது 5 ஓட்டுக்கள் 3 ஓட்டுக்களில் எத்தனையோ பேர் தோற்றுள்ளார்கள். அதை நாங்கள் சொல்லி அறிவித்திருக்கலாமே, அதை நாங்கள் செய்யவில்லை. முதல்வர் அவர்கள் எந்த வேலையையும் சரியாக செய்ய சொல்லியுள்ளார்கள்” என்று அவர் கூறினார்.

அமைச்சர் பாஸ்கரின்  பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் பாஸ்கரன் பேசியது அவரின் சொந்தக் கருத்து; கட்சியின் கருத்து இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், தனது கருத்தில் இருந்து பின்வாங்கிய அமைச்சர் பாஸ்கரன் பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க  முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்