திருச்சியில் 21-ந்தேதி திராவிடர் கழக செயற்குழு கூட்டம் - கி.வீரமணி அறிக்கை

திருச்சியில் 21-ந்தேதி திராவிடர் கழக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-04 21:00 GMT
சென்னை, 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிப் பாதையில், ‘நீட்’ என்றும், புதிய மத்தியக் கல்விக் கொள்கை என்றும் கண்ணிவெடிகளை மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதைத்து வைத்துள்ள பேரபாயம் நீடிக்கிறது. 

இதைப் பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் விழிப்புணர்வு இயக்கமாக கடந்த ஜனவரி 20-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கிய நமது கல்வி மீட்டெடுப்பு கடமைப் பயணம் சென்னையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அடுத்த களத்திற்கான ஆயத்தத்திற்குத் தொடக்கமாக திருச்சியில் வருகிற 21-ந்தேதி திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திடமான போராட்ட அறிவிப்புகள் வெளிவரும். பெரியார் என்றும் வாழ்வார்; எப்போதும், எவருக்கும் தேவைப்படுவார். தொண்டர்களே களம் காண ஆயத்தமாவீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்