குரூப் 4 தேர்வு ; தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடக்கம்
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.;
சென்னை
குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான கலந்தாய்வு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தொடங்கியது. முறைகேடு செய்த 39 பேர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு, கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
மார்ச் 17ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்னையில் குவிந்துள்ளனர்.