சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்: கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது - வியாபாரிகள் தகவல்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது என்று வியாபாரிகள் கூறினர்.

Update: 2020-03-18 00:57 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்க தலைவர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட் மூடல் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மையில்லை. வழக்கம்போலவே மார்க்கெட் செயல்படுகிறது. எனவே வியாபாரிகள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்களும் அச்சமடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்