மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது, தமிழக ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக வெளியிட்ட அரசிதழை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் , தவறும் பட்சத்தில், மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்று சேர்த்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.