ஜல் சக்தி விவகாரம்: திமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதாக திமுகவினர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-05-01 12:27 GMT
சென்னை,

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், இது வழக்கமான நிர்வாக நடவடிக்கை என தெரிவித்த பின்னரும் திமுகவினர்  குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நீர் வாரியமும் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்