தமிழக மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Update: 2020-05-05 09:37 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.  தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பேசலாம் எனத்தெரிகிறது. 

மேலும் செய்திகள்