கொரோனா தொற்றுக்கு வங்காளதேச நாட்டு முதியவர் சென்னையில் உயிரிழப்பு

கொரோனா தொற்று ஏற்பட்ட வங்காளதேச நாட்டை சேர்ந்த முதியவர் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

Update: 2020-05-13 02:51 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் 8 ஆயிரத்து 2 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  2,051 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  53 பேர் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், வங்காளதேச நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியான நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்