கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது- ஐசிஎம்ஆர் பாராட்டு

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2020-05-19 08:26 GMT
சென்னை,

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதன்மை வகிக்கிறது.  

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுவதாக தமிழக முதல்வருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.  ஐசிஎம்ஆர் சென்னை இயக்குநர் மனோஜ் முரோக்கர், துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோரை முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டு  தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்