தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்; தலைமை ஹாஜி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2020-05-23 16:30 GMT
சென்னை,

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்து உள்ளார்.  இன்று பிறை தெரியாத நிலையில், வரும் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்