கொரோனா பாதிப்பு: சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் -மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு: சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

Update: 2020-06-01 06:58 GMT

சென்னை

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையி மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா அதிகமாக பரவுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் 

சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை.சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது

தளர்வுகள் அதிகரிக்கும் போது நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது என கூறினார்.

மேலும் செய்திகள்