திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 127 நபர்களுக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 127 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-27 09:53 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1492 ஆக இருந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று  ஒரேநாளில் 127 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1619 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிற்கு இதுவரை 9 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்