விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-04 09:58 GMT
விருதுநகர்,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 875 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்